ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் புதிய ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு சென்னை அணிக்கு மட்டும் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை அணிக்கு கிடைக்கும் வரவேற்பை மற்ற அணிகள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு சென்னை அணிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். சென்னை அணி தடை செய்யப்பட்ட போதும் சென்னை அணி வீரர்கள் சென்னையை மறக்கவில்லை .
மீண்டு வந்த சென்னை சென்ற வருடம் பலமாக வரவேற்று கோப்பையை வெல்ல ரசிகர்களும் உறுதுணையாக இருந்தனர். இந்நிலையில் சென்னை அணியின் புது பாடல் வெளியாகியுள்ளது இதோ அந்த சென்னை அணியின் புதிய ஆந்தம் வீடியோ :
Wrap your phones in #Yellove now! Get yours from https://t.co/bKcAJjiWJK! #WhistlePodu @coveritupindia ???????? pic.twitter.com/0ApSlOdHoB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2019
வரும் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் முதல் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சிலமணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.