எல்லாம் தோனிக்கு தெரிந்து தான் நடந்தது. அவர் பார்த்துக்கொள்வார் – சமாளித்து மாட்டிக்கொண்ட சி.எஸ்.கே நிர்வாகம்

Csk
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று முன்தினம் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

auction-1

- Advertisement -

இந்த ஏலத்தில் பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும், சாம் குரானை 5.50 கோடிக்கும், ஹேசல்வுட் 2 கோடிக்கும் மற்றும் தமிழக வீரரான சாய் கிஷோரை 20 லட்சத்துக்கும் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. மேலும் 14.60 கோடி ரூபாய் மட்டுமே கையிலிருந்ததால் ஏலத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆனால் நாங்கள் தேர்வு செய்த சாவ்லா, குரான், ஹாஸல்வுட் மற்றும் சாய் கிஷோர் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது மூலம் சிஎஸ்கே பவுலிங்கில் பலப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் ஏலம் முடிந்த பிறகு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : குறைந்த தொகையுடன் சிஎஸ்கே ஏலத்தில் பங்கேற்றதால் மற்ற அணி வீரர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஏலத்தில் வீரர்களுக்காக காத்திந்து எடுத்ததாக தெரிவித்தார்.

csk-1

ஆனால் சிஎஸ்கே-வின் இந்த தேர்வை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். சாம் குரானை தவிர்த்து மற்ற அனைவரும் தேவையில்லாமல் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த தொகைக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக தெரிவு செய்திருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டின் போது கூட சிஎஸ்கே சுழற்பந்து வீச்சில் பலமாக இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தவித்தது.

Dhoni

அதுமட்டுமின்றி தொடக்க வீரரான வாட்சனுக்கு பேக்கப் இல்லாமலும், சென்னை அணியில் சரியான துவக்க வீரர் தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை கருத்தில் கொண்டு ரசிகர்கள் சரமாரியாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய நிர்வாகம் எல்லாம் தோனியின் திட்டப்படி தான் நடந்துள்ளது. அணி தேர்வு எப்படி அமைந்தாலும் தோனி அதனை சரியாக வழி நடத்தி செல்வார் என்று சப்பைக் கட்டு கட்டி சமாளித்தாலும் தோனியின் திட்டபடிதான் ஏலம் நடந்துள்ளதா ? தோனி இதுகுறித்து என்ன பேசப் போகிறார் என்று அவர் பேட்டி அளித்தால் மட்டுமே தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement