தோனிக்கு சிறப்பு பரிசினை அளித்து கவுரவித்து சி.எஸ்.கே நிர்வாகம் – வைரலாகும் புகைப்படம்

Dhoni
- Advertisement -

மிகப் பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட இருக்கிறது. அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நாளை இரவு சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது.

- Advertisement -

இந்த போட்டியை சிஎஸ்கே வெற்றியுடன் துவங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தோனி கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து களமிறங்கும் அதன் காரணமாக இந்தப் போட்டியில் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எதிரி உள்ளது. சிஎஸ்கே அணி துபாய் சென்றதில் இருந்து இப்போது வரை அணியில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் பயிற்சிகள் என பல்வேறு புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் போட்டி நாளை துவங்க இருக்கும் இந்நிலையில் சிஎஸ்கே அணியினருக்கு நேற்றிரவு சிறப்பு விருதும், பரிசுகளும் வழங்கப்பட்டது. அந்த விழாவில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு தங்க நிற தொப்பியை நிர்வாகத்தினர் பரிசாக வழங்கினார்.

தோனிக்கு மட்டுமல்லாமல் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வாட்சன் ஜடேஜா ஆகியோர் தங்களது தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement