சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள அடுத்த சிக்கல். முக்கிய வீரர் நாடு திரும்பினார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

csk 2
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

csk 1

- Advertisement -

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ம்தேதி தங்களது ஒட்டுமொத்த அணியுடனும் துபாய் சென்றது. ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் யார் யார் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த செய்தி சென்னை அணிக்கு ஏற்பட்ட முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பாதிப்பின் நிலையே தெரியாததுக்கு முன்னர் அதற்கு அடுத்த அடி சென்னை அணிக்கு தற்போது விழுந்துள்ளது.

அது யாதெனில் இந்த தொடரில் பங்கேற்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ரெய்னா சொந்த குடும்ப வேலைகள் காரணமாக இந்தியா திரும்பியதாக சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகிகள் விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் :

Priyanka raina 1

தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் இது போன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement