ஐ.பி.எல் கோப்பைக்கு சிறப்பு புஜை செய்த CSk அணி உரிமையாளர்..! – புகைப்படம் உள்ளே

srinivasan
- Advertisement -

ஐ.பி.எல் கோப்பையை வென்ற கையோடு, வெற்றியை கொண்டாட சென்னை அணி வீரர்கள் நேற்று மாலை சென்னைக்கு வந்தனர். விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தோனி மற்றும் சக வீரர்களும், பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று இரவு சென்னை வீரர்கள் தங்கி இருந்த விடுதியில் கொண்டாட்டங்கள் கலைகட்டியது
IPLcup
இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் ஐ.பி.எல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,சென்னை தி நகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் அங்கே கோப்பைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதற்கு மலையும் அணிவிக்கிப்பட்டிருந்தது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார் ஸ்ரீனிவாசன். அதில் அவர் பதிவிட்டுள்ள செய்தி என்னவென்றால் “ஐபிஎல் கோப்பை நேற்று வீடு(சென்னை ) வந்து சேர்ந்தது அது முறையாக தி நகரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, சாமி பெயரில் அர்ச்சனையும் செய்யப்பட்டது ” என்று பதிவிட்டுள்ளார்.
srini

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை மும்பை அணி வென்றது. அப்போதும் கூட அந்த அணியின் உரிமையாராக இருந்த அமபனியின் மகன் ஆனந்த் அம்பானி தங்கள் அணி வென்ற ஐபிஎல் கோப்பையை சிட்திவிநாயக ஆலயத்திற்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement