- Advertisement -
ஐ.பி.எல்

சிஎஸ்கே’விடம் வாயை மூடிட்டு போயிருக்கனும்.. தனியாளா அவர் உங்களை அழிச்சிட்டாரு.. ஆர்சிபி’யை விளாசிய ஸ்ரீகாந்த்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறிய பெங்களூரு அணி தற்போது கடுமையான கிண்டல்களை சந்தித்து வருகிறது. ஏனெனில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

அதனால் முதல் அணியாக வீட்டுக்கு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டியில் 6 வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக கடைசிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் அப்போது சென்னையை நாக் அவுட் செய்த வெற்றியை கோப்பையை வென்றது போல் ஆர்சிபி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:
குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களிடம் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு விராட் கோலி மிரட்டினார். அது போக களத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் கலாய்த்து வெறித்தனமாக கொண்டாடினர். அதன் உச்சமாக சில சிஎஸ்கே பெண் ரசிகைகளிடம் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆர்சிபி ரசிகர்கள் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோக்கள் வைரலாகின.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின் ஆர்சிபி அணியினர் ஜென்டில்மேனாக சென்றிருக்க வேண்டும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அதை விட்டுவிட்டு அதிகமாக கொண்டாடியதால் ராஜஸ்தானுக்காக தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்று ஆர்சிபி’யை தோற்கடித்ததாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வாழ்வில் நீங்கள் நன்றாக செயல்படும் போது வாயை மூடிக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ ஒன்றிற்காக தேவையின்றி சத்தம் போட்டால் உங்களால் அந்த வேலையை செய்ய முடியாது. சிஎஸ்கே அணிக்கு எதிராக வென்ற பின் அவர்கள் தேவையற்ற வீடியோக்களை போட்டு தேவையற்ற விஷயங்களை செய்தனர். அதனாலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் வந்து அவர்களை அழித்தார்”

இதையும் படிங்க: தோனி ஓய்வு பெற்று விட்டாரா? என்ன சொன்னாரு.. அடுத்த வருடம் விளையாடுவாரா? காசி விஸ்வநாதன் பேட்டி

“அதனாலேயே கிரிக்கெட்டில் நீங்கள் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும். ஒருவேளை நீங்கள் நன்றாக விளையாடினால் அதற்காக வாழ்த்துக்கள். ஒருவேளை சுமாராக விளையாடினால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் வாயை திறந்து ஆக்ரோசத்தை காட்டக்கூடாது. அவர்கள் தங்களுக்கு தாங்களே கம்பேக் கொடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். அதை சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பலமுறை செய்து கோப்பைகளையே வென்றுள்ளன. ஆனால் ஆர்சிபி 6 போட்டிகளில் மட்டும் வென்று தகுதி பெற்று வெளியேறினார்கள்” என்று கூறினார்.

- Advertisement -