ஒரு பால் பவுலிங் போடல. ஓரு பால் பேட்டிங் பண்ணல . இவரு எதுக்கு சி.எஸ்.கே அணியில் இருக்காரு – புலம்பும் ரசிகர்கள்

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி தற்போது அபிதபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்ததால் சென்னை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

Dhoni-1

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான அணியில் மீண்டும் ஒரு வீரரை அணியில் இணைத்ததால் தோனியின் முடிவு குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனத்தை இணையத்தில் கடுமையாக முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த போட்டியின் போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலையில் களமிறக்கப்பட்ட ஜாதவ் அந்தபோட்டியில் ஒரு பந்துகூட பேட்டிங் செய்யவில்லை.

மேலும் பௌலிங் செய்யும் போது கூட ஒரு பந்தினை கூட அவர் வீசவில்லை. அதனால் இன்றைய போட்டியிலும் அவர் அவசியமா ? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். மேலும் இத்தொடர் ஆரம்பத்திலிருந்தே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஜாதவை ரசிகர்கள் விமர்சித்ததால் இடையில் ஒரு போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

Jadhav 1

அவருக்கு பதிலாக களமிறங்கிய ஜெகதீசன் சிறப்பாக விளையாடி 33 ரன்களை குவித்தாலும் மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சொதப்பி வரும் கேதர் ஜாதவ்க்கு மட்டும் எவ்வாறு அணியில் இடம் கிடைக்கிறது. மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு அவசியம்தானா என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் இணையத்தின் வாயிலாக புலம்பி வருகின்றனர்.

Jagadeesan

எது எப்படி இருப்பினும் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து சிஎஸ்கே அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால் தற்போது நடந்து வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை அணி மோசமாக விளையாடி வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement