6 வருடத்திற்கு சி.எஸ்.கே படைத்திருக்கும் மோசமான வரலாறு – எப்படிபட்ட அணிக்கு இப்படி ஒருநிலமையா ?

csk
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

Garg-2

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

srh

சி.எஸ்.கே அணி பெற்ற இந்த தோல்வி தொடர்ச்சியான 3 தோல்விகள் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அதவாது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக் பிறகு இதேபோன்று தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றுள்ளது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 3 தோல்விகளை தொடர்ச்சியாக சந்தித்தது. அதன்பிறகு தற்போது மோசமான நிலைமையில் இந்தாண்டு அணி உள்ளது.

dhoni 1

தான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணியான சி.எஸ்.கே அணிக்கு இப்படி ஒரு நிலைமையா ? என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 3 முறை ஐ.பி.எல் சாம்பியன் ஆன சி.எஸ்.கே அணிக்கு உலகெங்கிலும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளாம் உண்டு என்றால் அது மிகையல்ல.

Advertisement