ஜடேஜா மனைவியை தாக்கிய விவகாரம்..! கான்ஸ்டபிள், ஜடேஜா பற்றி என்ன கூறினார் தெரியுமா..?

- Advertisement -

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் விளையாடிவரும் அதிரடி ஆட்டக்காரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா போலீசாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், மும்பை காவல்துறை எஸ் பி ஜடேஜாவிடம் சமீபத்தில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
JADEJA

சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் ஜாம் நகரில், ஜடேஜாவின் மனைவி ரிவபா, காரில் தனது குழந்தையுடன் சென்றுகொண்டிருந்த போது , அவர் சென்ற கார் திடீரென்று முன்னே சென்றுகொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிரின் பைக் மீது மோதிவிட்டது. அதனால், ஜடேஜாவின் மனைவி காரை விட்டு இறங்கினார்.

- Advertisement -

அப்போது, ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய், ஜடேஜா மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், விரைந்து வந்து சஞ்சய்யைத் தடுத்து நிறுத்தி அவர்களை மீட்டனர். இந்தத் தாக்குதலில், அவருக்கு காயம் ஏற்பட்டது. பெண் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது . மேலும், அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

jadejajadeja
இந்நிலையில் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய கான்ஸ்டபிள் சஞ்சய் அகிரின் மீது மும்பை போலீஸ் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மும்பை எஸ் பி பிரதீப் சஜூல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவ்வாறு தெரிவிக்கையில்” ஜடாஜேவின் மனைவி தாக்கப்பட்டது தொடர்பாக ஜடேஜாவிடம் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் அவர் இந்த விஷத்தை குறித்து பெரிதாக்க வேண்டாம் என்று தெரிவித்து விட்டார் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement