இவர்மீது சந்தேகம் வேண்டாம். நிச்சயம் செமிபைனல் மற்றும் பைனலில் இவர் ஜொலிப்பார் – கிளார்க்

Clarke
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய அணியின் வீரரான தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது சிறப்பாக விளையாட இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அவர்கள் நிச்சயம் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

தோனியின் ஆக்ரோஷமான ஆட்டம் இல்லாமலே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அவரை தற்போது வீணடிக்க வேண்டாம். அவர் முக்கியமான போட்டிகளான semi-final மற்றும் பைனலில் அவரது ஆட்டத்தை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள். தோனி மீது எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.

Dhoni

இது மட்டுமே நான் சொல்வது திரும்ப திரும்ப சொன்னாலும் தோனி சிறந்த வீரர் அவர் எப்பொழுதும் சிறந்த பினிஷர் ஆகவே கிரிக்கெட்டில் வலம் வருகிறார் கண்டிப்பாக இந்த உலகிலும் அவர் சாதிப்பார் என்று தோனி குறித்து கிளார்க் கூறினார்.

Advertisement