நான் ரிட்டயர்டு ஆக வேண்டாம்னு இவர் என்கிட்ட சொல்லிகிட்டே இருக்காரு – கெயில் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Gayle-2
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Mandeep 1

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் முதல் பாதியில் பஞ்சாப் அணியில் களமிறங்காத கெயில் தற்போது இரண்டாம் பாதியில் விளையாடி வருகிறார். அவர் அணியில் இணைந்ததிலிருந்து பஞ்சாப் அணி தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஐந்து ஆட்டங்களிலும் அவரது ஆட்டம் வேற லெவலில் சிறப்பாக உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் கெயில் அரைசதம் கடந்தார். போட்டி முடிந்த பிறகு 41 வயதான கெயில் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

gayle

பஞ்சாப் அணியின் இளம் வீரர்கள் அனைவரும் என்னை ரிட்டையர் ஆக வேண்டாம் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி மந்தீப் சிங்குடன் பேட்டிங் செய்யும்போது எப்பொழுதுமே என்னை ரிட்டயர்டு ஆக வேண்டாம் என்று கூறி வருகிறார். அதுமட்டுமின்றி அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ராகுல் என அனைவரும் என்னுடைய ஆட்டம் தற்போது வேற லெவல் இருப்பதாகவும் ரிட்டையர் ஆக வேண்டாம் என்றும் கூறிவருவதாகவும் கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement