ஒரே போட்டியில் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த சேட்டன் சக்காரியா – யார் இவர் ?

sakariya
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் அடித்தது. பஞ்சாப் தரப்பில் ஓப்பனாக களமிறங்கிய அணித்தலைவர் கே எல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 மற்றும் கெயில் 28 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 221ஐ தொட்டது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை ஒரு பக்கம் கைவிட, கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு பக்கம் 63 பந்துகளில் 119 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Sakariya

இருந்தபோதிலும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 217 ரன்கள் மட்டும்தான் குவிக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்ற போதிலும் அந்த அணியின் புதுமுக இளம் பந்துவீச்சாளர் சேட்டன் சக்காரியா 4 ஓவரில் 31 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது பங்களிப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

- Advertisement -

வறுமையான குடும்பத்தில் பிறந்த சேட்டன் சக்காரியா 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் தொடரில் விளையாடினார். அதில் கர்நாடக அணிக்காக விளையாடிய சக்காரியா சிறப்பாக பந்து வீசி அனைவரையும் அசத்தினார். இவரது திறமையை பார்த்து, கிளன் மெக்கிரத் நடத்தி வந்த எம்.ஆர்.எப் பேஸ் தொண்டு நிறுவனம் மாதந்தோறும் இவருக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பெரும் உதவியாக இருந்தது.

sakariya

அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்த சக்காரியா, நல்ல காலணிகளைக் கூட வாங்க முடியாமல் தவித்து வந்தார். பின்னர் அந்த அணியில் விளையாடிய மூத்த பேட்ஸ்மேன் செல்டன் ஜாக்சன் தான் இவருக்கு காலணிகளை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் கிரிக்கெட் விளையாட வந்த சக்காரியாவின் திறமையை கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை எடுத்தது. நம்பி எடுத்ததற்கு பாதகம் விளைவிக்காமல் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கையை சேட்டன் சக்காரியா பெற்றுவிட்டார்.

sakariya 2

முதல் போட்டியில் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் கிறிஸ் மோரிஸ் போன்ற முன்னணி பவுலர்களே ரன்களை கட்டுப்படுத்த கஷ்டப்பட்டு நிலையில், சக்காரியா மிக அற்புதமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி மிகப்பெரிய அளவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கண்டிப்பாக தொடர் முழுவதும் இவர் நன்றாக பந்துவீசி ராஜஸ்தான் அணிக்காக தனது முழுப் பங்களிப்பை நிச்சயம் கொடுப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement