ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டி புனேவில் கடந்த ஞற்று கிழமை (மே 20) நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணி மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் விக்கெட்டை தோனி கவனிக்க தவறியபோதும் நிகிடி டிஆர்எஸ் முறையில் அந்த விக்கெட்டை பெற்று அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது. பின்னர் களமிறங்கி சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியில் முதல் மூன்று வீரர்களும் ஒற்றை படை ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியில் அதிகபட்சமாக நாயர் 54 ரன்களும். மனோஜ் திவாரி 35 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 முதல் 9 ரன்கள் வரை கொடுக்க, இங்கிடி மட்டும் 4 ஒவர்களை வீசி 10 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
M56: CSK vs KXIP – Ravichandran Ashwin Wicket https://t.co/8ziYaVWVc8 via @ipl
— Sports Freak (@SPOVDO) May 20, 2018
ஒரு பக்கத்தில் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி கொடுத்திருக்க இந்த போட்டியில் 18 வது ஓவரை நிகிடி வீச, முதல் பந்தை பஞ்சாப் கேப்டன் அஷ்வின் எதிர்கொண்டார். பந்து அஷ்வின் பேட்டில் பட்டு சென்றது இதை விக்கெட் கீப்பர் தோனி கேட்ச் பிடித்தார். ஆனால் அதனை தோனி கவனிக்கவில்லை. இருப்பினும் நிகிடி அது அவுட் தான் என்று டி.ஆர்.எஸ் பயன்படுத்துமாறு தோனியிடம் கேட்டுள்ளார். பின்னர் அவர் கூறியது போலவே அது அவுட்டாக முடிந்தது. இதனை கண்ட அனைவரும் இங்கிடியின் சாதூர்யத்தை கண்டு வியந்தனர்.