MS Dhoni : கோலி விக்கெட்டை வீழ்த்திவிட்டு இம்ரான் தாஹிர் போன்று கொண்டாடிய சாகர் – வீடியோ

நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணியின் வீரரான கோலியின் விக்கெட்டை தீபக் சாகர் வீழ்த்தினார். 8 பந்துகளில் 9 ரன்களை எடுத்திருந்த கோலி

- Advertisement -

நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணியின் வீரரான கோலியின் விக்கெட்டை தீபக் சாகர் வீழ்த்தினார். 8 பந்துகளில் 9 ரன்களை எடுத்திருந்த கோலி விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரின் விக்கெட்டை வீழ்த்திய சாகர் மைதானத்தில் ஓடிச்சென்று இம்ரான் தாஹிர் போன்று விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

சாகரின் இந்த கொண்டாட்டத்தை கண்ட தோனி ஏன் இப்படி செய்கிறான் என்பது போன்று சிரித்துக்கொண்டே சாகரை நோக்கி கைநீட்டினார். பின்பு அவரது கொண்டாட்டத்தை ரசித்தவாறே சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Advertisement