உங்களோட இடத்தை அவர் பிடிச்சுட்டாரு.. அதான் சான்ஸ் கிடைக்கல.. சாஹலுக்கு இம்ரான் தாஹிர் அட்வைஸ்

Imran Tahir.jpeg
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 14 மாதங்கள் கழித்து தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இருப்பினும் இந்த அணியில் கேஎல் ராகுல் போன்ற சில மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வரிசையில் சமீப காலங்களில் முக்கிய ஸ்பின்னராக விளையாடி வந்த யுஸ்வேந்திர சஹால் இந்த தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளார். 2016இல் அறிமுகமான அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

முதலில் இருந்து:
இருப்பினும் 2021 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் அந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவருக்கு கடந்த டி20 உலகக் கோப்பையில் அஸ்வின் இருந்ததால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் சமீபத்திய தொடர்களில் கழற்றி விடப்பட்டு வருகிறார்.

ஆனால் 2023 விஜய் ஹசாரே கோப்பையில் 18 விக்கெட்டுகளை 3.70 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து ஃபார்முக்கு திரும்பியதால் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஹால் இத்தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்ட குல்தீப் யாதவ் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னருக்கான இடத்தை பிடித்து விட்டதாலேயே சஹாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே இழந்த இடத்தை பிடிக்க அனைத்தையும் முதலில் இருந்து துவங்குங்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சஹால் சிறப்பாக பந்து வீசவில்லை என்று நான் கருதவில்லை. அவருடைய பவுலிங் நன்றாக இருக்கிறது. அதனால் சஹால் நீக்கப்படவில்லை. மாறாக குல்தீப் யாதவ் அவரை விட சிறப்பாக செயல்பட்டு ஒரு படி முன்னே இருக்கிறார். அவர் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்திய அணியில் சரியான கலவையை உருவாக்குகிறார்”

இதையும் படிங்க: தவறான காரணத்தை சொல்லி வசமாக சிக்கிய இஷான் கிசான்? ஆப்கானிஸ்தான் தொடரில் கழற்றி விடப்பட்ட பின்னணி

“எனவே சஹால் அனைத்தையும் மீண்டும் புத்துணர்ச்சியுடன் துவங்க வேண்டும். ஏனெனில் குல்தீப் யாதவ் தமக்கு கிடைத்த வாய்ப்பை 2 கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். எனவே சஹால் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். மிகவும் நல்ல பவுலரான அவர் விரைவில் கம்பேக் கொடுப்பார்” என்று கூறினார்.

Advertisement