தெரியாம தப்பு நடந்துருக்கலாம்.. என்ன இருந்தாலும் ரோஹித் சர்மா அதை செஞ்சுருக்கக் கூடாது.. ஏபிடி கருத்து

ab de villiers
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற அந்தத் தொடரில் முடிந்தளவுக்கு போராடியும் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது.

இருப்பினும் பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா முதலில் அடித்த 212 ரன்களை ஆப்கானிஸ்தானும் 20 ஓவர்களில் சரியாக எடுத்தது. அதனால் போட்டி சமனில் முடிந்ததை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் 2 அணிகளும் சரியாக தலா 16 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

- Advertisement -

வந்திருக்க கூடாது:
அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட 2வது சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதை விட அப்போட்டியில் முதல் சூப்பர் ஓவரில் களமிறங்கி அதிரடியாக 13* ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா 2வது சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்து 11* ரன்கள் குவித்தது சர்ச்சையாக மாறியது.

அதாவது முதல் சூப்பர் ஓவரின் 5வது பந்தில் ரிட்டையர்ட் அவுட்டான அவர் மீண்டும் 2வது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்திருக்கக் கூடாது என்று எதிரணி ரசிகர்கள் விமர்சித்தனர். சொல்லப்போனால் ஒரு சூப்பர் ஓவரில் விளையாடிய பேட்ஸ்மேன் அல்லது பவுலர் மீண்டும் அதே போட்டியின் 2வது சூப்பர் ஓவரில் பேட்டிங் அல்லது பவுலிங் செய்யக் கூடாது என்பது பொதுவான விதிமுறையாகும்.

- Advertisement -

இருப்பினும் அதை மீறி கேப்டன் ரோகித் சர்மா விளையாடியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் ரிட்டயர்ட் அவுட் என்று அறிவிக்கப்பட்ட பின் ரோகித் சர்மா பேட்டிங் செய்திருக்கக் கூடாது என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்தனர். ஒருவேளை ரிட்டையர்ட் ஹர்ட்டாக இருந்தாலும் கூட ரோஹித் 2வது விளையாடியிருக்கக் கூடாது என்று தெரிவிக்கும் அவர் அது ஸ்கோர்கார்ட் ஒளிபரப்பின் தவறால் ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் அவரு தன்னோட பழைய பார்முக்கு திரும்பிட்டாரு.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க – இர்பான் பதான் எச்சரிக்கை

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டபுள் சூப்பர் ஓவர் நடந்தது நம்ப முடியாததாக இருந்தது. அதில் முதல் சூப்பர் ஓவரில் நீங்கள் ரிட்டையர்ட் அவுட் என்று முடிவு செய்யப்பட்டால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது. இது போன்ற சூழ்நிலையில் அவர்கள் (இந்தியா) ரோகித் சர்மா காயமடைந்து ரிட்டையர்டு ஹர்ட்டாகி சென்றார் என்று சொல்லலாம். ஒருவேளை அவர் ரிட்டையர்ட் அவுட் என்று ஸ்கோர் கார்டில் தவறாக காட்டப்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement