கொரோனா வைரஸ் அங்கயும் விட்டு வைக்கலயா இங்கிலாந்து வீரர் செய்த செயல் – பாராட்டி தள்ளும் ரசிகர்கள்

England
- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் ஐ.சி.சி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. நியூசிலாந்து அணிக்கு எதிராக பல சர்ச்சைகளை கடந்து இந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்டது.

England

அதனை தொடர்ந்து பல தொடர்களாக சிறப்பாக விளையாடிவரும் இங்கிலாந்து அணி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சமீபத்திய தொடரை ரத்து செய்து நாடு திரும்பினார்கள். மேலும் அந்த அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் சோதனை செய்யப்பட்டது. மேலும் சோதனையின் முடிவில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் கரோனா வைரஸ் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு அனைவரும் தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு நிதி திரட்டும் வகையில் களமிறங்கியுள்ளார் ஜோஸ் பட்லர்.

joes buttler

ஆமாம் தான் உலக கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் வரும் பணத்தை மருத்துவ உபகரணங்கள் வாங்கும் மற்ற மருத்துவ சாதனங்களுக்காக கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை மறுபதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஸ்டீவன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

தற்போது வரை இங்கிலாந்தில் 2600 பேர் வைரஸ் தொற்றினால் இறந்து போயுள்ளனர். இந்தியாவிலும் இதே போல் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மாநில மற்றும் மத்திய அரசின் நிவாரண நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற தொகையை கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவரின் இந்த செயலும் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அந்நாட்டு நிர்வாகமும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement