தனது கிரிக்கெட் மட்டையில் ஆபாச வார்த்தை எழுதிவிளையாடிய வீரர்.! கேள்விகளுக்கு அவர் குடுத்த விளக்கம் என்ன..!

- Advertisement -

கிரிக்கெட் உலகில் பல்வேறு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் தனது பேட்டில் ஒரு ஆபாசமான வார்த்தையை எழுதி வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். இதனால் பல்வேறு தரப்பினரிடமும் இருந்தும் ஜோஸ் பட்லருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

joesbuttler

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் நடைபெற்றது. இதல் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்ஸில் 80 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்த போட்டியில் ஜோஸ் பட்லர் பயன்படுத்திய பேட்டின் கைப்பிடி பகுதியில் ஆங்கிலத்தில் ஒரு ஆபாச வார்த்தை ஒன்று எழுதப்பட்டிருந்தது பின்னர் கவனிக்கப்பட்டது. இதனை பார்த்த அனைத்து ரசிகர்களும், முன்னணி வீரராக இருக்கும் ஒருவர் இது போன்ற தகாத வார்த்தைகளை தன்னுடைய பேட்டில் பயன்படுத்தலாமா என்று முகம் சுழித்தனர்.

jos-buttler

மேலும் சர்வதேச போட்டியில் விளையாடும் ஒரு வீரர், தான் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்களில் எந்த வித வாசகத்தையும் எழுத கூடாது என்பது ஐசிசி-யின் விதி. இதனால் ஜோஸ் பட்லருக்கு இந்த விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜோஸ் பட்லர் யாரும் எதிர்பார்க்காத விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

joes buttler

சமீபத்தில் இது பற்றி அவர் பதிலளிக்கையில் ‘ பேட்டிங் செய்யும் போது இக்கட்டான சூழ்நிலையில் நான் இருக்கும் போது, அந்த பேட்டில் உள்ள வசனத்தை பார்க்கும் போது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் தூண்டும். அதற்காக தான் அவ்வாறு அந்த பேட்டில் எழுதியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement