நான் விக்கெட் எடுக்கலான கூட பரவாயில்லை. மொத்தத்துல எனக்கு இது நடந்தா போதும் – ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

Bumrah-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

boult

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் பும்ரா கூறுகையில் : நான் விக்கெட்டுகளை எடுக்காமல் இந்த தொடரை மும்பை அணி வெற்றி பெற்றால் கூட எனக்கு மகிழ்ச்சிதான். எனக்கு கொடுக்கப்பட்ட ரோலை நான் சரியாக செய்து வருகிறேன். துவக்கத்தில் யார்க்கர் வீசுவது முக்கியமான ஒன்று. இந்தப் போட்டியிலும் நான் துவக்கத்தில் அவ்வாறே பந்து வீசினேன்.

Bumrah

அந்த வகையில் நான் தொடர்ந்து பந்துவீசி வருவதால் விக்கெட்டுகள் கிடைக்கின்றது. எப்பொழுது கேப்டன் என்னை அழைத்து பந்து வீச சொன்னாலும் நான் முன்வந்து பந்துவீச தயாராக உள்ளேன். முடிவுகளை பற்றி யோசிக்காமல் அந்த தருணத்தில் நான் சிறப்பாக பந்துவீசும் விஷயத்தை மட்டுமே நினைத்து வீசி வருகிறேன். இவ்வாறு நினைப்பதாலே என்னிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிவருகிறது என்று பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement