ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணியாக இருந்துவருவது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஆகும். 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் அந்த அணியால் ஒரு கோப்பை கூட வெல்ல முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை .
If you know, you know.#PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/unoSfHTb4q
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 14, 2020
இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடர் வரும் போதெல்லாம் அந்த அணிக்கு ரசிகர்கள் சரியான சூடு கொடுத்து வருவார்கள். சமூக வலைதளங்களில் அடிக்கடி களாய்க்கப்படும் அணியாகவும் இது இருந்து வருகிறது. ஏன் தனது சொந்த ரசிகர்கள் ரசிகர்கலாலேயே இந்த அணிக்கு கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில் அந்த அணி தனது லோகோவை மாற்றி உள்ளது . இந்த லோகோவில் சிங்கத்தின் படத்தின் 2 கைகளைத் தூக்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. இதனை பார்த்த ஜஸ்ப்ரிட் பும்ரா நான் பந்துவீசும் ஆக்சன் போல் உள்ளது என்று கிண்டலடித்துள்ளார்.
உண்மையில் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. பும்ரா பந்துவீசுவதை போலவே இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்களும் இது நிச்சயம் அவரது பந்து வீச்சின் ஆக்சன் தான் என்று பதிவு செய்து வருகின்றனர்.