MS Dhoni : தோனி நேற்றைய போட்டியில் இதற்காகவே பொறுமையாக ஆடினார் – பும்ரா

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரை

Bumrah
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

Dhoni

இந்நிலையில் நேற்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கூறியதாவது : இந்த போட்டியில் தோனி சிறப்பாக ஆடினார். அவர் இறங்கும்போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் அவர் துவக்கத்தில் நிதானமாக ஆடினார்.

- Advertisement -

பிறகு ஆட்டம் இறுதி கட்டத்தை அடையும் போது அவருடைய பழைய பாணியில் அதிரடியாக ஆடி சிறப்பான இலக்கை இந்திய அணி பெற வழி வகுத்தார். எந்த சூழ்நிலையில் எப்படி ஆட வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும் அவரைப் பார்த்து வரும் இளம் வீரர்கள் அதனை புரிந்து அவரிடமிருந்து அந்த குணத்தை பின்பற்றி இந்திய அணிக்காக ஆடவேண்டும்.

Dhoni 1

தோனி மிகச்சிறந்த வீரர் அவர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டுள்ளார். தோனி எப்போது ரன் குவிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும். அதனை அவர் போட்டியின்போது கணித்து விளையாடுவார் அவர் மிகச்சிறந்த வீரர் என்றும் பும்ரா தெரிவித்தார்.

Advertisement