இவருடன் இணைந்து பந்து வீசுவதால் நான் நிறைய விடயங்களை கற்றுக் கொள்கிறேன் – பும்ரா ஓபன் டாக்

Bumrah
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

boult

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் ஜஸ்பிரித் பும்ரா கூறுகையில் : நான் டிரென்ட் போல்ட் உடன் இணைந்து பந்து வீசுவது மிக அற்புதமான விடயம். நாங்கள் மைதானத்தில் சூழ்நிலைகள் குறித்து நிறைய பேசிக்கொள்கிறோம். அதிலிருந்து சில முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்கிறோம். நான் அவரிடமிருந்து நிறைய விடயங்களை பந்துவீச்சில் கற்றுக்கொள்கிறேன்.

பேட்ஸ்மென்கள் பொதுவாக அவர்கள் அவார்டு குறித்து பேசிக் கொள்வார்கள் அந்த வகையில் பவுலர்களாக நாங்கள் இருவரும் பேசிக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுகளை பற்றி நான் யோசிப்பதும் கிடையாது, வருத்தப்படுவதும் கிடையாது. அணி வெற்றி பெற்றது அதுவே எனக்கு மகிழ்ச்சி என்று பும்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement