இன்று இரவு 8 மணிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெறுவது குறித்து முக்கிய அறிவிப்பினை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பை அணி நிராவகம் கூறியதாவது :
டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடியபோது பும்ரா தோள்பட்டையில் காயம்ஏற்பட்டது . ஆனால், காயத்தின் தன்மை பெரியதாக இல்லாததால் அவர் தொடர்ந்து அணியின் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அணியின் மருத்துவரும் பும்ராவின் உடல் தகுதியினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவரின் அறிவுரையின்படி பும்ரா நன்றாக இருக்கிறார். மேலும் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும் என்றும் கூறியுள்ளார்.
The entire nation sleeps well when @Jaspritbumrah93 smiles ????????#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians #RCBvMI pic.twitter.com/eTe5W8KvQ8
— Mumbai Indians (@mipaltan) March 27, 2019
இதனால் பெங்களூரு அணிக்கு எதிரான இந்த போட்டியில் பும்ரா பங்கேற்பார் என்று அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், முதல் போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணி இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.