இவரே மும்பை அணியின் மிகப்பெரிய சொத்து – ஜாஹீர் கான் பேட்டி

Zaheer
- Advertisement -

இந்த வருடம் 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் நாளை மறுதினம் சென்னையில் துவங்குகிறது. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

mumbai indians

- Advertisement -

மும்பை அணி வீரர்களும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை பற்றி அந்த அணியின் முன்னாள் கேப்டனான ஜாகீர் கான் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் ஜாகீர் கான் கூறியதாவது : மும்பை அணியில் ரோஹித், பட்லர் மற்றும் பாண்டியா சகோதரர்கள் ஆகியோர் போன்ற சிறந்த வீரர்கள் நமது அணியில் இருக்கின்றனர். இருப்பினும், மும்பை அணியின் மிகப்பெரிய சொத்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான். அவரின் விக்கெட் வீழ்த்தும் திறனும், ரன்னை சேமிக்கும் பவுலிங்கும் மும்பை அணியின் வெற்றிக்கு தொடர்ந்து உதவி வருகிறது. எனவே, இவரே இந்த தொடரின் மும்பை அணியின் சிறந்த வீரராக வலம் வருவார் என்று ஜாகீர் கான் கூறினார்.

Bumrah

இதுவரை மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகள் மட்டுமே தலா 2 முறை ஐபில் கோப்பையை வென்றுள்ளது. ரோஹித்தின் தலைமையில் மும்பை அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement