Worldcup : உலகக்கோப்பை முன்னிட்டு இங்கிலாந்து ராணி அளித்த விருந்து – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Team
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup 3

- Advertisement -

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

இதற்கு முன்னதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் 10 அணிகளை சேர்ந்த கேப்டன்களுக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களிடம் இருந்து விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று 10 அணி கேப்டன்களும் அவர்கள் அளித்த ராஜ விருந்தில் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் ஒவ்வொரு கேப்டனிடமும் கைகொடுத்து அலவளாவி மகிழ்ந்தனர்.

kohli

பிறகு உணவு உபசரிப்புக்கு பின் அனைத்து கேப்டன்களுடனும் ராணி எலிசபெத் புகைப்படம் ஒன்றினை எடுத்துக்கொண்டார். மேலும், அவர்களுக்கு எந்த வகையான உணவு உபசரிப்பு வழங்கப்பட்டது என்று உறுதியாக தெரியவில்லை.

Advertisement