இவரை மாதிரி ஒரு சாம்பியன் பிளேயரை ஏன் வெளிய உக்காரவச்சிருக்கீங்க – பிரெட் லீ ஓபன்டாக்

Lee
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து நாளை துபாய் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் நிச்சயம் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

NZvsIND

- Advertisement -

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். ஆனால் இந்த தொடரின் முதல் லீக் போட்டி முடிந்தும் இன்னும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.

அணியில் சில வீரர்களின் ஏன் சேர்க்கப்பட்டார்கள் ? சில வீரர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை ? என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்திய அணியில் சேர்க்க வேண்டிய ஒரு வீரர் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ashwin

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அஷ்வினின் அனுபவம் தேவைப்படுகிறது. அவர் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி உலகின் பல்வேறு முன்னணி வீரர்களுக்கு எதிராக பந்துவீசி உள்ள அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய அனுபவம் நிச்சயமாக இந்த தொடரில் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவ டீம்ல ஏன் சேத்தாங்கன்னு இவங்க 2 பேர் தான் பதில் சொல்லனும் – சந்தீப்பாட்டீல்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அஷ்வின் நிச்சயம் களமிறங்க வேண்டும் என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் வருண் சக்ரவர்த்தி விளையாடியதால் அஷ்வின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement