CSK : சூப்பர் ஸ்டார் ரஜினியை பிடிக்கும். தமிழ் படத்திலும் நடிக்க விரும்பும் சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமை

bravo
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Ragul

போட்டி முடிந்து ஜாலியான பேட்டி ஒன்றினை சென்னை அணி வீரரான பிராவோ அளித்தார். அதில் பிராவோ கூறியதாவது : நான் ரஜினிகாந்த் பற்றி நிறைய செய்திகளை கேள்விப்பட்டு இருக்கிறேன். மேலும், அவரை நான் இதுவரை நேரில் பார்த்தது இல்லை அதுமட்டுமில்லாது அவருடைய திரைப்படத்தினை கூட பார்த்தது இல்லை. ஆனால் , அவரை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

Bravo

மேலும், நான் தமிழ் சினிமாவில் நடிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஏற்கனவே, சித்திரம் பேசுதடி 2 படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறேன். அந்த பாடலே தமிழ் சினிமாவில் எனது முதல்படி அதனைத்தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிக வாய்ப்பு கிடைத்து அது எனக்கு பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் பிராவோ. பிராவோ ஒரு இசைப்பிரியர் என்பதும் எப்போதும் பார்ட்டி ஜாலி என்று நடனம் ஆடியபடி வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement