நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ கூறியதாவது : நாங்கள் போட்டியின் முன் எந்த அணி கூட்டமும் நடத்துவதில்லை. மேலும்,போட்டிக்கு முன் எந்த திட்டமும் நாங்கள் வகுப்பது கிடையாது என்று தோனியின் கேப்டன்சி குறித்து அவர் பேசிய வீடியோ இதோ :
“We don’t have team meetings, we don’t plan.” – Dwayne Bravo.
Perks of having a bunch of mature, experienced heads in the @ChennaiIPL side! #VIVOIPL pic.twitter.com/ERbGD2OpYN
— IndianPremierLeague (@IPL) March 27, 2019
எங்கள் அணியில் உள்ள வீரர்கள் மிகவும் பக்குவப்பட்டவர்கள். அதனால் ஆட்டத்தினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணுகுவோம் இதுவே தோனி எங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார். இதனாலே எங்களால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை தரமுடிகிறது. மேலும், வீரர்களுக்கு வயது ஒரு தடை கிடையாது என்று பிராவோ பேசினார்.
நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.