MS Dhoni : உலகம் முழுவதும் சி.எஸ்.கே அணிக்கென தனி ரசிகர்கள் இருக்க இதுதான் காரணம் – பிராவோ

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும்

Bravo
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

rahane

- Advertisement -

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியினை மேற்கொண்டனர். கடந்த போட்டியில் விளையாடாத பிராவோ இந்த போட்டிலும் விளையாடமாட்டார். பிராவோவின் காயம் சரியாக இன்னும் ஒருவாரம் ஆகும். இந்நிலையில் பிராவோ சி.எஸ்.கே அணி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : சென்னை அணிக்கு கிடைக்கும் வரவேற்பு உலக அளவில் கிடைக்கிறது. சென்னையில் சி.எஸ்.கே அணிக்கு ரசிகர்கள் இருப்பது வியப்பில்லை. ஆனால், சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் எந்த மைதானத்தில் விளையாடினாலும் சி.எஸ்.கே அணிக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த அளவிற்கு சென்னை அணியை ரசிகர்கள் சாம்பியன் அணியாக நினைத்து கொண்டாடுகின்றனர்.

Dhoni

இதற்கு பெரிய காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனி தான். ஏனெனில், ஐ.பி.எல் துவக்கத்தில் இருந்து சென்னை அணியை வழி நடத்தி மூன்று கோப்பைகளை பெற்று தந்துள்ளார். மேலும், தடை காலத்திலும் தோனி இருந்த புனே அணியை சி.எஸ்.கே ரசிகர்கள் ஆதரித்தது நமக்கு தெரியும். எனவே, தோனிக்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே சி.எஸ்.கே அணிக்காக ஆதரித்து வருகிறது. மேலும் தமிழக மக்கள் தோனியை தங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கின்றனர் என்று பிராவோ கூறினார்.

Advertisement