ஆஸ்பிடலில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிராவோ. பாவம் அவருக்கு என்ன ஆனது தெரியுமா ?- விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது போல வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற உள்ளது. இதற்காக இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Bravo

- Advertisement -

இந்த தொடரில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் பிராவோ விளையாடுகிறார். இதற்காக பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பயிற்சி ஆட்டத்தில் பிராவோ பங்கேற்று அந்த பயிற்சி போட்டியில் விளையாடினார்.

அப்போது எதிர்பாராத விதமாக பிராவோவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் கரீபியன் பிரிமியர் தொடரில் இருந்து பிராவோ தற்போது வெளியேறியுள்ளார். அத்துடன் இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நான் நான்காவது அறுவை சிகிச்சைக்கு செல்ல இருக்கிறேன். இந்த சிகிச்சை நல்ல முறையில் முடிய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் எனக்காக வேண்டிக்கொள்ளும் வாழ்த்து தெரிவிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று பிராவோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே சி.எஸ்.கே அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா சில நாட்களுக்கு முன் காலில் அறுவை சிகைச்சை செய்துகொண்டார். தற்போது பிராவோ கையில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் சி.எஸ்.கே அணி நிர்வாகம் சற்று வருத்தத்தில் உள்ளது.

Advertisement