MS Dhoni : அதிர்ச்சியில் சி.எஸ்.கே. காயத்தால் வெளியேறிய வீரர். காயத்துடன் கவலைப்படும் தோனி

தொடர்ச்சியாக வீரர்கள் விடயத்தில் சென்னை அணிக்கு சறுக்கல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்து இரு வீரர்கள் வெளியேற தற்போது மற்றொரு வீரர் காயம் காரணமாக வெளியேறி உள்ளார்.

Dhoni
- Advertisement -

இந்த வருடம் 12 ஆவது ஐ.பி.எல் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும், இந்த ஆண்டும் ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே அணியே கைப்பற்றும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

CSKShop

- Advertisement -

ஆனால், தற்போது சி.எஸ்.கே அணிக்கு போதாத காலம் போல அணியில் இருந்து ஒவ்வொரு வீரராக வெளியேறிவருகின்றனர். முதலில் காயம் காரணமாக தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி அணியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் டேவிட் வில்லே தந்து மனைவின் பிரசவத்திற்க்காக அனுமதி பெற்று அணியில் இருந்து விலகி இங்கிலாந்து சென்றார். இந்நிலையில் மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது மற்றொரு சி.எஸ்.கே அணி வீரரும் காயமடைந்துள்ளார்.

KKRvCSK_

மும்பை அணிக்கு எதிராக விளையாடியபோது சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பிராவோ காயத்தால் அவதிப்பட்டார். எனவே, அவர் உடனடியாக மருத்துவ குழுவின் கட்டுப்பாட்டிற்கு வந்தார்.

- Advertisement -

Bravo

அதன்படி அவரது காயம் சரியாக 2 வாரங்கள் ஆகுமாம். அதனால் இன்னும் 2 வாரங்கள் நடக்கும் போட்டிகளில் பிராவோ விளையாட மாட்டார். டெத் பவுலிங்கில் வல்லவரான இவர் இல்லாதது சென்னை அணிக்கு பலத்த அடியாகும். மேலும், அவருக்கு பதிலாக களமிறங்கபோகும் வீரரையும் விரைவில் அறிவிப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Bravo

இன்று மதியம் 4 மணிக்கு துவங்க உள்ள போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement