இவர்க்கு இவ்ளோ பெரிய தொகையா ? பெங்களூரு அணி பெரிய ரிஸ்க் எடுத்து இருக்காங்க – பிராட் ஹாக் வெளிப்படை

Hogg
- Advertisement -

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் அணிகள் எல்லாம் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த தொடர் நடக்க உள்ளது. அதற்கான வீரர்களின் ஏலமும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்று முடிந்தது. கடந்த முறை கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முறை இந்தியாவில் பழையபடி போட்டிகள் நடக்கும். கொரோனாவை காரணம் காட்டி சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடக்கும்.

auction-1

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது பவுலர்களை அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல் , ஐபிஎல் என்று வந்தால் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார் .கடந்த சீசனில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்தாண்டு 14 ஆவது சீசனுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் ரூ .2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும் , அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன . கடைசியில் 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி கைப்பற்றியது.

மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சொதப்பினாலும் கூட , அவரை ஐபிஎல் அணிகள் அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை . கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பியும் கூட , அதைவிட கூடுதல் தொகைக்கு ஏலம் போயுள்ளார் மேக்ஸ்வெல். இந்நிலையில் , மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி எடுத்தது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் , மேக்ஸ்வெல் ஆடிய 9 ஐபிஎல் சீசன்களில் 2 சீசனை தவிர வேறு எதிலுமே சரியாக ஆடியதில்லை . ஆனாலும் அவரை ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆர்சிபி எடுத்தது என்பதை என்னால் கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியவில்லை.

Maxwell

இதன்மூலம் அர்சிபி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக நான் கருதுகிறேன். இது மேக்ஸ்வெல்லின் தவறல்ல. அவர் ஒவ்வொரு ஏலத்திலும் அவரது பெயரை பதிவு செய்கிறார் அவ்வளவுதான். அவர் சரியாக ஆடவில்லை என்றாலும், அணிகள் அவரை போட்டி போட்டுக்கொண்டு அதிக தொகைக்கு ஏலமெடுக்கிறார்கள் . ஆனால் இவ்வளவு பெரிய தொகையெல்லாம் மேக்ஸ்வெல்லுக்கு கொஞ்சம் ஓவர்தான் என்று ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement