Bhuvaneshvar Kumar : இந்த மைதானத்தில் பந்துவீசுவதற்கு வீசாமலே போய்டலாம் – புவி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ்

Bhuvi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Bhuvi

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது.

warner

பிறகு 151 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் பஞ்சாப் அணி சார்பாக ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 71 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும், மாயங்க் அகர்வால் 55 ரன்களை அடித்தார்.

- Advertisement -

rahul

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய புவனேஷ்வர் குமார் கூறுகையில் : இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இருப்பினும், நாங்கள் பந்துவீசிய விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் கணித்த இடத்தில் பந்துவீச முடியவில்லை. பனிப்பொழிவு காரணமாக யார்க்கர் மற்றும் ஸ்லோ பந்துகளை வீச முடியவில்லை.

srh

இந்த போட்டியின் இறுதிவரை ஆட்டத்தை கொண்டு செல்ல நினைத்தோம். அதன்படி மைதானம் கைகொடுக்காமல் இருந்தும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. இந்த போட்டியில் இரண்டாவதாக பந்துவீசுவது மிக கடினம் என்று புவனேஷ்வர் குமார் கூறினார்.

Advertisement