மீண்டும் அணிக்கு திரும்பி பயிற்சி செய்த நட்சத்திர வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இந்திய அணி 2 – 1 கணக்கில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் துவங்க உள்ளது.

- Advertisement -

இந்த போட்டிக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் நேற்று இந்தூர் மைதானத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களுடன் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயிற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் தசைப்பிடிப்பு காரணமாக தேசிய கிரிக்கெட் அகடமியில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் இவர் நேற்று அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

அவரின் இந்த பயிற்சி அவரின் உடல் தகுதியை சோதிக்க அல்லது மேலும் அவர் திறமை அதிகரிக்காவா என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. ஆனால் இதுகுறித்து அணி அதிகாரி ஒருவர் கூறியதாவது : புவனேஷ்வர் குமார் தனது திறமையை சோதிக்க வேண்டும் என்றே அணியில் பயிற்சி செய்தார்.

bhuvi

மேலும் அவரின் திறனை அதிகரிக்க தற்போது மேம்படுத்த நிர்வாகம் அவரை பயிற்சி செய்ய கேட்டுக்கொண்டுள்ளது. அவரின் காயம் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். இதனால் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஸ்வர் குமார் டெஸ்ட் தொடரில் பங்கேற்க கூடிய சாதகமான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement