முதல் டெஸ்ட் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் – பெண் குழந்தைக்கு தந்தையான இந்திய வீரர்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி தற்போது கான்பூர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 25ஆம் தேதி துவங்கிய இந்த போட்டி தற்போது நான்காம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்களை குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது.

அதன்பிறகு தற்போது இந்திய அணி நான்காவது நாளில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதன்படி நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடிய புவனேஸ்வர் குமார் டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட புவனேஸ்வர் குமார் மட்டும் நுபுர் ஆகியோரது ஜோடிக்கு தற்போது சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து தங்களது திருமணநாளுக்கு அடுத்த நாள் அதாவது 24 நவம்பர் 2021 முதல் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிவித்த புவனேஷ்வர் குமார் தனது மனைவி மற்றும் மகள் நலம் என்றும் அந்த பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : மெகா ஏலத்திற்கு முன்னர் ராஜஸ்தான் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் – 4 பேருமே டாப் பிளேயர்ஸ் தான்

உலக கோப்பை தொடரில் முக்கிய வீரராக இடம்பெற்றிருந்த புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக மீண்டும் அணியில் விளையாட வைக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரில் தான் அவர் இந்திய அணிக்காக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement