எவ்ளோ பாத்திருக்கேன்.. ஆனா இப்படி ஒரு வெற்றி எனக்கு ஸ்பெஷல் – இந்திய அணியை வீழ்த்திய பிறகு ஸ்டோக்ஸ் பூரிப்பு

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி போட்டியின் நாலாம் நாளான இன்று ஜனவரி 28-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுவிடும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சிறப்பான ரன் குவிப்பு காரணமாக இந்திய அணிக்கு 231 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதனை துரத்தமுடியாமல் 202 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : நான் கேப்டன்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து நிறையவே சிறப்பான தருணங்களை சந்தித்துள்ளேன். நாங்கள் அனைவரும் இணைந்து சிறப்பான பல வெற்றிகளை பெற்றுள்ளோம். அந்த வகையில் இந்த வெற்றி நிச்சயமாக நான் கேப்டனாக பெற்ற மிகச் சிறந்த வெற்றியாக கருதுகிறேன்.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இந்தியாவில் பெரும் முதல் வெற்றி அதனால் இது எனக்கு ஸ்பெஷலானது. இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் நான் தவறை செய்த போது இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? ரோஹித் எவ்வாறு பீல்டிங் பிளான்களை அமைக்கிறார் என்பதை உற்று நோக்கினேன். மேலும் இந்திய ஸ்பின்னர்கள் எவ்வாறு பந்து வீசுகிறார்கள் என்பதை எல்லாம் உற்று கவனித்து இரண்டாவது இன்னிங்ஸின் போது நான் அதை நிவர்த்தி செய்தேன்.

இதையும் படிங்க : 100% பெஸ்ட்.. சின்ன மாற்றம் தான் செஞ்சேன்.. இந்தியா அதிர்ஷ்டத்தை கொடுத்துருச்சு.. போப் பேட்டி

அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்துள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் போப்பும், பந்துவீச்சில் ஹார்ட்லியும் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. ஒல்லி போப் அடித்த இந்த சதம் ஒரு இங்கிலாந்து வீரராக இந்தியாவில் விளையாடப்பட்ட மிகச்சிறப்பான இன்னிங்ஸ் என பென் ஸ்டோக்ஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement