இந்தியா கிட்ட நாங்க இப்படி தோத்தது தப்பேயில்ல.. 4-1 என்ற கணக்கில் தோற்ற பிறகு – பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டி இதோ

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த வேளையில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணியிடம் இழந்திருந்தது.

அதனை தொடர்ந்து மார்ச் 7-ஆம் தேதி துவங்கிய ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதியான இன்று மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டி முடிந்து அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்த தொடரில் நாங்கள் ஒரு மிகச்சிறந்த அணியிடம் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளோம். இதற்கு அடுத்து நிறைய போட்டிகள் வர இருப்பதால் அந்த போட்டிகளை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த தோல்வியிலிருந்து நகர உள்ளோம்.

இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்திருப்போம் என்பதை அறிந்திருப்பார்கள். எங்களால் எங்களுடைய சரியான செயல்பாட்டை இந்த தொடரில் வெளிப்படுத்த முடியவில்லை. அதேபோன்று இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் வந்து மிகச் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற்றத்தைக் காண வேண்டியது அவசியம். இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியை சேர்ந்த ஜாக் க்ருவ்லி மற்றும் பென் டெக்கேட் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். அதேபோன்று பந்துவீச்சில் பஷீர் மற்றும் ஹார்ட்லி ஆகியோர் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க : இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை பாக்கெட்டில் வைத்திருக்கும் அஸ்வின்.. கபில் தேவை முந்தி புதிய 2 வரலாற்று சாதனை

அதேபோன்று ஜோ ரூட்டும் இந்த தொடரில் இறுதி நேரத்தில் பார்முக்கு வந்துள்ளார். எனவே எதிர்வரும் கோடை காலத்தில் அவரது சிறப்பான ஆட்டத்தை காண காத்திருக்கிறோம். இந்த தொடர் ஒட்டு மொத்தமாகவே எங்களுக்கு ஒரு மிகச்சிறப்பான தொடராக அமைந்தது என பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement