ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதை புகைப்படத்தின் மூலம் உறுதி செய்த பி.சி.சி.ஐ

Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏற்கனவே சீனியர் வீரரான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஓய்வு எடுத்துள்ளனர். மேலும் கேப்டன் விராட் கோலியும் முதல் போட்டியில் ஓய்வில் உள்ளதால் ரஹானே தற்காலிக கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசை எவ்வாறு அமையப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் துவக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 3-வது இடத்தில் புஜாரா, 4-வது இடத்தில் ரஹானேவும் விளையாடுவார்கள் என்பது உறுதி. அதேவேளையில் ஐந்தாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் ? ஷ்ரேயாஸ் ஐயர் ? ஆகிய இருவரில் யார் இறங்குவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இன்று இந்திய அணி கேப்டன் ரகானே முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளார்.

நாளைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக உள்ள நிலையில் அதனை தற்போது பிசிசிஐ-யும் தங்களது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உறுதி செய்துள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனை பெறுவது போன்று உள்ள புகைப்படம் மற்றும் பேட்டிங் பயிற்சி எடுக்கும் புகைப்படம் என நான்கு புகைப்படங்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : பயிற்சியின் போது சுழற்பந்து வீச்சாளராக மாறி பேட்ஸ்மேன்களுக்கு பிராக்டீஸ் கொடுத்த – ராகுல் டிராவிட்

அதோடு அந்த புகைபிபடத்திற்கு கேப்ஷனாக “All set to don the whites” என டெஸ்ட் போட்டிகளில் அவர் அறிமுகமாக தயார் என்று என்றும் “Go Well Shreyas” என்றும் பதிவிட்டு நாளைய போட்டியில் அவர் விளையாடுவதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement