இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ இடம் தெரிவித்துள்ளதாக நேற்றில் இருந்தே ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. மேலும் விராட் கோலியின் இந்த கோரிக்கையை பி.சி.சி.ஐ தற்போதைக்கு ஏற்றுக்கொண்டு இருந்தாலும் தனது ஓய்வு குறித்த முடிவினை பரிசீலிக்குமாறு கூறி வருகிறது.
விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் :
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் விராட் கோலியும் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறினால் இந்திய டெஸ்ட் அணி அனுபவ வீரர்கள் இன்றி மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என பிசிசிஐ நினைக்கின்றது.
இதன் காரணமாக தற்போதைக்கு அவரது ஓய்வு முடிவினை தள்ளி வைக்குமாறு அவரது இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும் விராட் கோலி அவரது முடிவிலிருந்து பின்வாங்குவதாக இருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் விராட் கோலி இப்படி திடீரென சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற பிசிசிஐயின் நடவடிக்கை தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரின் போதே இந்திய டெஸ்ட் அணியை சில காலம் கேப்டனாக வழிநடத்த விராட் கோலி விரும்புவதாக கூறியிருந்தார்.
அதுமட்டும் இன்றி அண்மையில் வெளியான ஒரு செய்தியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக தான் சில காலம் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தாகவும் சில தகவல்கள் பரவியிருந்தன. ஆனால் இனி டெஸ்ட் அணியின் கேப்டனாக வரப்போகும் ஒருவர் இளம்வீரராக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ அந்த கோரிக்கையை நிராகரித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 3 மைதானத்தில் வைத்து 2025 ஐ.பி.எல் தொடரை முடிக்க பி.சி.சி.ஐ போட்டுள்ள பலே திட்டம் – விவரம் இதோ
இப்படி விராட் கோலி நேரடியாக கேப்டன்சி குறித்து முறையிட்டும் அதனை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் போனதாலேயே விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.