தொடர் தோல்விகளின் எதிரொலி : விராட் கோலியின் பியூசை புடுங்கவுள்ள பி.சி.சி.ஐ – அதிரடி அறிவிப்பு

BCCI
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே படுமோசமான தோல்விகளை பெற்றுள்ளதால் தற்போது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியுள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறே வாய்ப்பில்லை என்று சிலர் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.

indvsnz

- Advertisement -

ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில் அடுத்த நடைபெறவுள்ள 3 போட்டிகளிலும் பெரிய ரன் வித்தியாசத்தில் ஜெயிப்பது மட்டுமின்றி மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார்.

இந்த தொடர் முடிந்து அவர் அணியின் கேப்டன் பதவியை துறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கடைசியாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வீரர்களின் பேட்டிங் வரிசை, வீரர்களின் தேர்வு என அடுத்தடுத்து கோலி செய்த தவறே அதிகளவு சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

Williamson

இதன் காரணமாக தற்போது பிசிசிஐ அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : இப்போது பிசிசிஐ விராட் கோலியின் செயல்பாடு மீது மகிழ்ச்சியாக இல்லை. அவரது கேப்டன்ஷிப் மீது அதிருப்தி நிலவுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த 2 மாற்றங்களை செய்யலனா ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக கூட தோக்க வாய்ப்பிருக்கு – சுனில் கவாஸ்கர்

இந்திய அணி இந்த டி20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால் நிச்சயம் விராட் கோலியிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்படும் என்று தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்றுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement