பி.சி.சி.ஐ மட்டும் இந்த ஒரு முடிவை எடுத்திருந்தா இப்போ ஐ.பி.எல் இந்த நிலைமைக்கு வந்திருக்காது – விவரம் இதோ

IPL-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் சீசன் ஆனது பாதி போட்டிகளை கடந்த நிலையில் தற்போது காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. வீரர்களிடையே பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த தொடர் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சரியான நேரம் வரும்போது மீண்டும் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வெளியாகியது.

hetmyer

- Advertisement -

அதன் பின்னர் அனைத்து வீரர்களும் தற்போது பத்திரமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அமித் மிஸ்ராவும், சன் ரைசர்ஸ் அணியின் சாஹா என அடுத்தடுத்து கொரோனாவால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியிலும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் என மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இந்த தொடரானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடரை இந்தியாவில் நடத்துவது என்ற தவறான முடிவை எடுத்து இந்த தொடரை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

sandeep

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்தியாவில் நிச்சயம் கொரோனா அதி தீவிரமாக பரவும் என்பதால் இந்த வருட ஐபிஎல் தொடரையும் கடந்த ஆண்டை போலவே ஐக்கிய அமீரகத்தில் நடத்தலாம் என்ற கருத்து பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ தான் இந்த ஆண்டு நிச்சயம் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டதால் இந்த தொடரானது இங்கே துவங்கப்பட்டது.

Ganguly

கடந்த 13 வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இந்த ஆண்டும் அங்கு நடத்தப்பட்டு இருந்தால் இந்த தொடருக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் இங்கிலாந்து தொடரை இந்தியாவில் பிசிசிஐ எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்ததால் நிச்சயம் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்திடலாம் என்கின்ற நம்பிக்கையில் நடத்தி தற்போது பாதியிலேயே ரத்து செய்யும் நிலைமைக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement