ஆசியக்கோப்பை : அஷ்வினோடு சேர்த்து 4 வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை – உறுதிசெய்த புகைப்படம்

Ravichandran Ashwin
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆசிய கோப்பை அட்டவணை வெளியான போதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதப்போகும் இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்த போட்டியை காண தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடைசியாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தான அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இதே துபாய் சர்வதேச மைதானத்தில் வீழ்த்தியதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

நிச்சயம் இந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணியே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் பிளேயிங் 11 வீரர்களைப் பற்றிய ஒரு குறிப்பு வழங்கியுள்ளது.

அந்தவகையில் பி.சி.சி.ஐ தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கேப்டன் ரோஹித் முதல் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வரை 11 புகைப்படங்களை மட்டும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதனால் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பிளேயிங் லெவன் இதுவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த புகைப்படங்களில் விட்டுப்போன நான்கு வீரர்களாக தமிழக வீரர் அஷ்வின், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதன் காரணமாக இந்த நால்வர் இந்திய அணியில் இடம் பெற மாட்டார்கள் என்றும் அவர்களை தவிர்த்து 11 பேர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்கள் என்று குறிப்பிடும் வகையில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : இந்தியாவின் போட்டிகள் நடைபெறும் துபாய் மைதானம் எப்படி? பிட்ச் ரிப்போர்ட் இதோ

அந்த புகைப்படங்களில் உள்ள 11 வீரர்கள் பின்வருமாறு : 1) ரோகித் சர்மா, 2) கே.எல்.ராகுல், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹர்திக் பாண்டியா, 7) தினேஷ் கார்த்திக், 8) புவனேஸ்வர் குமார், 9) யுஸ்வேந்திர சாஹல், 10) ஆவேஷ் கான், 11) அர்ஷ்தீப் சிங்.

Advertisement