அஸ்வினின் 100வது போட்டியில் கவாஸ்கருக்கு கேக் வெட்டி.. வாழ்த்து சொல்லி கொண்டாடிய பிசிசிஐ.. காரணம் என்ன?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா நகரில் மார்ச் 7ஆம் தேதி துவங்கியது. அதில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்று மாபெரும் சாதனை படைத்தார். 2011இல் அறிமுகமான அவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதனால் பிசிசிஐ சார்பில் அவருக்கு 100வது போட்டிக்கான ஸ்பெஷல் தொப்பியை பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பரிசளித்து கௌரவித்தார். மேலும் போட்டி துவங்குவதற்கு முன்பாக இரு பக்கமும் வீரர்களை நிறுத்தி கைதட்டி பாராட்டி வரவேற்ற கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியை வழி நடத்தும் கௌரவத்தை அஸ்வினுக்கு கொடுத்தார்.

- Advertisement -

கவாஸ்கருக்கு கேக்:
அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவுக்காக 100 போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அப்படி ஒருபுறம் அஸ்வினுக்கு கௌரவத்தை வழங்கிய பிசிசிஐ மறுபுறம் வர்ணனையாளர்கள் அறையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்தது.

அதாவது மார்ச் 7ஆம் தேதி 1987ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்தார். அப்படி உலகில் எத்தனையோ வீரர்கள் இருந்தும் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தினத்தின் 37வது வருடத்தை கொண்டாடும் வகையிலேயே அவருக்கு பிசிசிஐ கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டியது. அதை ஏற்றுக்கொண்ட பின் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது சிறப்பானது. இந்த நாளை பிசிசிஐ நினைவில் கொண்டதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மார்ச் 7ஆம் தேதி 10000 ரன்கள் அடித்தது எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. மேலும் வர்ணனையாளர் அறைக்கு வந்த போது இந்த நாளில் தான் நான் என்னுடைய முதல் அரை சதத்தை அடித்ததாக வல்லுனர் மோகன்தாஸ் மேனன் தெரிவித்தார்”

இதையும் படிங்க: குல்தீப் யாதவுக்கு பிளான் சொன்ன ஜுரேல்.. அப்படியே தோனியை பாத்த மாதிரியான நிகழ்வு – நடந்தது என்ன?

“இதே நாளில் அஸ்வின் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். எனவே இது எனக்கும் அஸ்வினுக்கும் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டுக்கு ஸ்பெஷலான நாளாகும். இந்த நாளில் துவங்கிய இப்போட்டியையும் நாம் வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். முன்னதாக வெறித்தமாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ராஜாங்கம் நடத்திய காலத்தில் அறிமுகமாகி பெரும்பாலும் ஹெல்மெட் போடாமலேயே விளையாடிய கவாஸ்கர் 125 போட்டிகளில் 10122 ரன்களை 51.12 என்ற அபாரமான சராசரியில் குவித்த பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement