ஐ.பி.எல் தொடரில் இவர் ஒரு குவாலிட்டி பிளேயர். அவரது சாதனைகள் அவரைப்பற்றி பேசும் – பேர்ஸ்டோ பேட்டி

Bairstow 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxipvssrh

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் (97 ரன்கள்) குவித்த பேர்ஸ்டோ தேர்வானார்.

bairstow

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் பேர்ஸ்டோ கூறுகையில் : இந்த தொடரில் எனது மூன்றாவது அரை சதம் இதுவாகும். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதே என்னுடைய குறிக்கோள். இன்றைய பார்ட்னர்ஷிப் எனக்கு வார்னருடன் சிறப்பாக அமைந்தது. அவர் ஒரு குவாலிட்டி பிளேயர். அவரது இந்த அரைசதம் ஐ.பி.எல் தொடரில் ஐம்பதாவது அரை சதமாகும். அவருடைய சாதனைகள் அவரைப் பற்றி பேசும்.

warner

மேலும் இந்த வெற்றிக்கும் அவரது இந்த சிறப்பான பேட்டிங்கும் ஒரு காரணம். இன்றைய போட்டியில் நான் அடித்து விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த மைதானத்தின் அளவுகள் இந்தியாவை விட சற்று வித்தியாசமாக இருந்தாலும் சிறப்பாகவே இருக்கிறது. தட்பவெட்ப நிலையும் சற்று வித்தியாசமானது தான். எங்களது அணி வீரர்கள் இதனைப் புரிந்து சிறப்பாகவே செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement