ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் வழக்கமாக வீசும் சுழற்பந்து வீச்சு இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர் போன்று ஓடிவந்து வீசியும், ஜாதவ் போன்று சைட் ஆர்ம் பந்துவீச்சு என அசத்தினார். இதோ அந்த வீடியோ :
Fast bowler Kedar Jadhav? Where did that come from Ashwin? https://t.co/TYHtGWH2Xo via @ipl
— Siva.k (@sivakubendiran) April 6, 2019
தற்போது பஞ்சாப் அணி இலக்கினை எதிர்த்து ஆடி வருகிறது. பஞ்சாப் அணி இதுவரை 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை அடித்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 79 ரன்கள் தேவை.