இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ செய்த செயல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த அவர் பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்தார். அதனை கண்ட அம்பயர்கள் மைதான ஊழியர்கள் உதவியுடன் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இந்நிலையில் தற்போது இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4-வது வீரராக பேட்டிங் செய்யவே அவர் தயாராகி களத்துக்கு வந்து விட்டார். களத்திற்கு வந்தது பேட்ஸ்மேன் இல்லை, ஜார்வோ என்று தெரிந்ததும் மீண்டும் அம்பயர்கள் மைதான பாதுகாப்பு ஊழியர்களை அழைக்க அவர்கள் வந்து ஜார்வோவை எச்சரித்து வெளியேற்றினர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா, புஜாரா மற்றும் கோலி ஆகியோரது ஆட்டத்தை பாராட்டிய அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் இன்றைய போட்டியில் ரோகித், புஜாரா மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர் என்று பதிவிட்டிருந்தார்.
Today’s play was as good as it can get with @ImRo45 @cheteshwar1 @imVkohli and Jaarvo showing great intent and grit!🤩😂😂 Keep going fellas and stop doing this Jaarvo. #IndvsEng
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) August 27, 2021
மேலும் அதே டிவீட்டில் இங்கிலாந்து ரசிகர் ஜார்வோவை குறிப்பிட்டு இதே போன்று நீங்கள் மைதானத்திற்குள் நுழைவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு தனது பதிவை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.