Ashwin : ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு இவர்களே காரணம் – அஸ்வின் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான்

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 52 ரன்களும், மில்லர் 27 பந்துகளில் 40 ரன்களையும் அடித்தனர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திரிபாதி 50 ரன்களும், பின்னி 11 பந்துகளில் 33 ரன்களையும் அடித்தனர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Ashwin

போட்டி முடிந்து வெற்றி குறித்து குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : இந்த தொடரில் 10 புள்ளிகளை பெறுவது முக்கியமானது. இப்போது நாங்கள் 10 புள்ளிகளை பெற்றுவிட்டோம். வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி எனினும் வெற்றி போதுமான ரன்களை நாங்கள் அடிக்கவில்லை. இந்த மைதானத்தில் 182 ரன்கள் பத்தாது. இன்னும் 10 – 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்கவேண்டும். இருப்பினும், எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

Arshdeep singh

எங்கள் அணியின் அறிமுக இளம் வீரரான அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசினார். 19 வயதே ஆகும் அர்ஷ்தீப் சிங் சி.எஸ்.கே பந்துவீச்சாளரான தீபக் சாகர் போன்று பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்கிறார். இவருக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று அஸ்வின் கூறினார்.

Advertisement