KXIP vs SRH : நாங்கள் வெற்றிபெற்றாலும் செய்த தவறை மறைக்க விரும்பவில்லை – அஸ்வின்

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும்

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Bhuvi

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது.

warner

பிறகு 151 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பஞ்சாப் அணி சார்பாக ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 71 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும், மாயங்க் அகர்வால் 55 ரன்களை அடித்தார்.

- Advertisement -

rahul

போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது : இது போன்ற கடைசி வரை சென்று முடியும் போட்டிகள் எப்போதும் சுவாரசியம் தான். இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் அதனால் வெற்றியும் பெற்றோம். இருப்பினும், கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் வரை விட்டுக்கொடுத்தோம் இது அணிக்கு நல்லதல்ல.

KL-Rahul

ஏனெனில், இன்னும் 10-15 ரன்கள் வரை சன் ரைசர்ஸ் அடித்திருந்தால் போட்டி அவர்கள் பக்கம் திரும்பி இருக்கும். முஜீப் சிறப்பாக பந்துவீசியினார். அவரின் பந்துவீச்சு இந்தமைதானத்தில் சிறப்பாக அமைந்தது. பஞ்சாப் அணி ரசிகர்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஆதரவு அளப்பரியது என்றும் அஸ்வின் கூறினார்.

Advertisement