நாங்கள் செய்த இந்த சிறிய தவறுகளே அணிக்கு தோல்வி தந்தது – அஸ்வின் வருத்தம்

Ashwin
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 6 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப் அணி அதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

Kxip

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனால் 219 ரன்கள் இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 190 ரன்களை மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தோல்விக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது : நாங்கள் செய்த சிறிய தவறுகள் எங்களுக்கு பெரிய மதிப்பினை கொடுத்துவிட்டன. ரஸ்ஸல் பேட்டிங் செய்தபோது விக்கெட் விழுந்து அது நோபால் என்று தெரிந்ததும் அதிக அளவு வருத்தப்படும். அந்த ஒரு விக்கெட்டே ஆட்டத்தின் முடிவினை மாற்றியது.

Russell

200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் எட்டக்கூடிய இலக்குதான். ஆனால், நாங்கள் மேலும் சில ரன்களை விட்டுக்கொடுத்தோம். இதுபோன்ற சிறிய சிறிய தவறுகளே எங்கள் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று நினைக்கிறேன் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறினார்.

Advertisement