டெல்லி அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு இவர்களே காரணம் – அஸ்வின் புகழாரம்

Ashwin
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.

Dc

- Advertisement -

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய அஸ்வின் : நாங்கள் 25 ரன்களை வரை குறைவாக அடித்துவிட்டோம் என்றே நினைக்கிறன். இந்த மைதானத்தில் இந்த இலக்கினை வைத்து எதிரணியை வீழ்த்துவது கடினம் அதுவும் பண்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இருப்பினும், அவர்களை கட்டுப்படுத்தியதற்கு முழுக்காரணம் ஷமி மற்றும் குரான் வீசிய சிறப்பான பந்துவீச்சே.

Curran

இந்த போட்டியில் கெயில் இல்லாததால் நாங்கள் துவக்கத்தில் குரான்னை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினோம். இந்த போட்டியில் மைதானத்தின் தன்மையும் எங்களுக்கு சற்று கைகொடுத்தது என்றே நான் கூறுவேன் என்று அஸ்வின் கூறினார்.

Advertisement